யமுனைக் கரையில் பொங்கிய தமிழ்ப் பண்ணிசை…தொடர்ச்சி…
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
கோடிலிங்கம் தலைநகருக்குப் புதியவர் அல்ல. பெரியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் காந்தி நினைவகத்தில் ஒருமுறை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் இவர் பாடிய தேவாரப் பாடல்களை, கண்ணீர் மல்கக் கேட்டு உருகியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் பிற்பகுதியில் திருவருட்பா பாடல்களைத் தனித்து மிகவும் அற்புதமாகப் பாடினார் கோடிலிங்கம்.
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது. திருமதி பத்மா கிருஷ்ணன், திவ்வியப் பிரபந்தப் பாடல்களை மிகவும் தெளிவான உச்சரிப்பில், மிகவும் அழகாகப் பாடினார்.
சீர்காழி [...]
Archive for January, 2009
9 Jan