
- ஏ.வி.எம்.ராஜன் & புஷ்பலதா
எழுத்தாளர் ஜெய்புன்னிஸாவின் கணவரான ‘தூயவன்’ நாகூரைச் சேர்ந்தவர். இயர்பெயர் எம்.எஸ்.அக்பர். தூயவனின் முத்திரைக் கதைகள் ஆனந்த விகடனில் அடுத்தடுத்துப் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. . இவரது முதல் முத்திரைக்கதை 1967-ல் ஆனந்த விகடனில் பிரசுரமாகி ரூ. 501/- பரிசைப் பெற்றது.
தூயவன் திரையுலகில் நுழைய இச்சிறுகதையே வாயிலானது. ஆனந்த விகடனில் இச்சிறுகதையை படித்த ஏ.வி.எம்.ராஜன், மேஜர் சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க , தூயவன் எழுதிய “பால்குடம்” மேடை நாடகமாக அரங்கேறி பின்னர் திரைப்பட வடிவமும் பெற்றது.
தூயவன் 84-படங்களுக்குத் திரைக்கதை வசனம் தீட்டியுள்ளார். 7 படங்களைச் சொந்தமாக தயாரித்துள்ளார். ‘வைதேகி காத்திருந்தாள்’, அன்புள்ள ரஜினிகாந்த அவற்றுள் சில.
தூயவன் எழுதிய சிறுகதைகள் இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.
நன்றி : முனைவர் ஹ.மு.நத்தர்சா
(80-களில் இஸ்லாமியத் தமிழ் சிறுகதைகள்)
தொடர்புடைய சுட்டி :
தூயவனைப் பற்றிய விவரங்கள் – நாகூர் ரூமியின் வலைத்தளத்திலிருந்து