பாவம் வாயில்லாப் பிராணிகள். அதற்கு சைவயானை என்றும், வைணவ யானை என்றும், முஸ்லிம் யானை என்றும் மதச் சாயம் பூசி விடுகிறான் மனிதன். யானைக்கு ‘மதம்’ பிடிப்பது இதனால்தானோ? கவிஞர் வைரமுத்துவின் கவிதை நினைவில் வந்தது. இதோ அந்தக் கவிதை :
விலங்குகள் நம்மிலும்
மானமுள்ளவையானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல்கள் இல்லைகாட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லைஅங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லைமதம் பிடித்தலையும்
மனிதாயானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப்புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச்சிங்கம் – மகமதியமான்காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?
– கவிப்பேரரசு வைரமுத்து
nagoorumi
November 3, 2009 at 9:27 pm
வைரமுத்துவின் கவிதையும் அருமை, யானைக்கு ’மதம்’ பிடிப்பது பற்றிய உங்கள் விளக்கமும் அருமை!
அன்புடன்
நாகூர் ரூமி