பாலைவன
அஞ்சல் அட்டையில்
காற்றின் முகவரி
எத்துணை அழகு?
இந்த அடுக்குத் தொடர் .. ..
அண்ணாவின்
அடுக்கு மொழியைக் காட்டிலும்
அழகோ அழகு !
அகன்ற மணற்பரப்பை
ஆட்டோகிராப்
ஆக்கியது யார்?
மருந்துச்சீட்டில்
அவசரமாய் கிறுக்கும்
மருத்துவரின் கையெழுத்து போலல்லாது
உலகிலேயே
அழகான கையெழுத்து
காற்றுக்குத்தான் போலும்.
தூரிகையே இல்லாமல்
ஓவியம் வரையும் சூத்திரம்
காற்றுக்கு மாத்திரமே சாத்தியம்.
நெளிவு சுளிவு
தெரிந்த காற்று
பிழைத்துக் கொள்ளும் !
அரசியல்வாதியின்
பிள்ளையைப்போல !
ஓவியர் ஜெயராஜின்
வளைவுகள் ஆபத்தானவைதான் !
இதோ பாருங்கள்
கவர்ச்சியான வளைவுகளை !
ஆனால் ஆபத்தானவை அல்ல
காற்றுக்கு
கவிதை எழுத
கற்றுக் கொடுத்தது
யாராக இருக்கும்?
படிமங்களும்
அடுக்குத் தொடர்களும்
தண்டியலங்காரமும்
அப்பப்பா…
அட்டகாசம் போங்க….
#அப்துல்கையூம்
11.11.2009
kabeer
November 11, 2009 at 10:58 pm
No No ………………………………. M.F.HUSSAIN