RSS

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப்பற்றி கவிஞர் வாலி

13 Jun

திரைப்படத்தைத் தாண்டி இலக்கிய உலகிலும் எனக்கோர் இடத்தைத் தந்து அங்கீகரித்த பெருமகனார், அமரராகிவிட்ட நீதியரசர் திரு.இஸ்மாயீல் அவர்கள். அவர் தலைமை ஏற்றிருந்த சென்னை கம்பன் கழகத்தில் பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர்.

என்னுடைய “அவதாரப் புருஷ”னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர் திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி என்னைப் பெருமை படுத்தியவர் திரு. எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.

– கவிஞர் வாலி

நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

 

Tags: , ,

2 responses to “நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப்பற்றி கவிஞர் வாலி

Leave a comment