மனுஷனுக்கு உள்ள சொத்து
மனசு ஒண்ணுதான்..! – அதில்
மனுஷநேயம் இருக்கும்வரை
மனசு பொன்னுதான்..!
மறுமைதரும் சொர்க்கம், நரகம்
மனசுனாலேதான்..! – அதில்
மனுஷநீதி மரிச்சுப்போனா
நரகம் பக்கம்தான்…!
மனசு என்னும் வீட்டிலேதான்
இறைவன் வசிக்கிறான்..! – அதன்
மாசுபடா எண்ணங்களைப்
பார்த்து ரசிக்கிறான்..!
தூசுபடிஞ்சு மனசுமாறிப்
போகும்போதுதான் – அதில்
துஷ்டஷைத்தான் உள்ளேவந்து
வேதம் ஓதுரான்..!
கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
01.05.1998