RSS

நித்யஜீவி

13 Jun

Nithya Jeevi

“பக்கவாட்டு சிந்தனை” என்ற வார்த்தையை கேள்வியுறும் போதெல்லாம் “அது என்ன பக்கவாட்டு சிந்தனை?” என்று என் மனதில் சந்தேகம் எழுவதுண்டு. படுக்கையில் ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்துக்கொண்டு சிந்திப்பதற்குப் பெயர்தான் பக்கவாட்டு சிந்தனையோ என்று நான் நினைத்தது உண்டு. ஒரு சிந்தனையை தெளிவு பெறுவதற்காக பல கோணத்தில் சிந்தித்து தீர்வு காண்பதுதான் LATERAL THINKING எனப்படும் இந்த பக்கவாட்டுச் சிந்தனை. இதில் கரை கண்டவர் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ். இருக்கும்வரையில்தான் ஜாதி, மதம். இறந்தபின் எல்லாம் ஒண்ணுதான் என்றுதான் நாம் கேள்விபட்டிருக்கிறோம். அதையும் மறுக்கிறார் நம் கவிஞர். என்ன ஒரு மாறுபட்ட சிந்தனை..!

நித்யஜீவி
===========

இருக்கும்போதுதான்
ஜாதியும் மதமும்
இறந்த பின்னாலே
யாவரும் ஒன்றே..!

எவரோ சொன்னது
எனக்கும் கேட்டது –

அது எப்படி…?

இந்து இறந்தால்
பிணம் ஆகிறான்.
கிறிஸ்தவன் இறந்தான்
“பாடி” ஆகிறான்.
முஸ்லிம் இறந்தால்
“ஜனாஸா” ஆகிறான்

மனிதன் இறந்தாலும்
மதமும் ஜாதியும்
மரித்துப் போகாது..!
அது – நித்யஜீவி…!!

கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
25.11.2002

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: