RSS

குடத்திலிட்ட விளக்குகள்

29 Jan

Screenshot_20200129_084709

நாகூர் எத்தனையோ எண்ணிலடங்கா படைப்பாளிகளை எழுத்துலகில் களம் இறக்கியிருக்கிறது. ஆன்மீக எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள்,  மொழிபெயர்ப்பு படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், திரைப்பட வசனகர்த்தாக்கள், கவிராஜர்கள் இப்படியாக பன்முகப் படைப்பாளிகள் எழுத்துலகில் வலம் வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னால் ஒரு சில பெயர்கள் விட்டுப்போய் விடுமோ என்ற பயத்தினால் அந்த நீண்ட பட்டியலை நான் குறிப்பிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அதிகமான எண்ணிக்கையில், அதாவது 55 நூல்கள் வெளியிட்டு சாதனை படைத்திருக்கும் எனது நண்பர் நாகூர் ரூமியைப் பற்றி நானிங்கு சொல்ல வேண்டியதில்லை.  நமக்கெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே கிடைக்கிறது. இவருக்கு மாத்திரம் எப்படி 36 மணிநேரம் வாய்க்கிறது என்றெல்லாம் நான் பொறாமை பட்டதுண்டு. ரூமிலேயே இருந்துக்கொண்டு எழுதுவதால் இவருக்கு ரூமி என்று பெயர் வந்ததோ என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. (அப்ப ஹோமர் என்ன Home-ல் இருந்துக் கொண்டு எழுதியவரா என்றெல்லாம் கேட்டு படுத்தக்கூடாது.,ஆமாம்_

நான் இதுவரை இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறேன். மூன்றாவது ஆய்வுநூல் எழுத எனக்கு 5 வருடங்கள் பிடித்தது. இன்னும் அந்த நூல் வெளிவந்த பாடில்லை. ஒரு நூலை பதிப்பிப்பதற்குள் தாவு கழன்று, நாக்கு வெளியே தள்ளி விடுகிறது. நான் பணக்கட்டைச் சொல்லவில்லை மெனக்கெட்டைச் சொல்கிறேன்.

துபாயில் இருந்துக்கொண்டு ஒரு பெரிய வாசகர் பட்டாளத்தைச் சமாளித்துக் கொண்டு எழுதிக் குவிக்கும் கணிணி பிதாமகன் ஆபிதீன் கூட இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதியிருக்கிறார். (உயிர்த்தலம், இடம்). “ஓவியா ஆர்மி” போல் நிச்சயம் “ஆபிதீன் ஆர்மி”யும் இருக்க வேண்டும்.

நாகூர் ஈன்ற மற்றொரு பிரபலம் சாரு நிவேதிதா 53 நூல்களுக்கு மேல் எழுதியிருப்பதாக என் கணிப்பு.

ஆனால் நாகூரைச் சேர்ந்த ஒருவர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்போதோ சதம் அடித்து விட்டார். இவரைப் பற்றி 2012-ஆம் ஆண்டில் என் வலைத்தளத்தில் “வெளிச்சத்திற்கு வராத படைப்பாளிகள்” என்ற குறிப்போடு ஒரு பதிவு இட்டிருந்தேன்.

1a

டி.என்.சேஷனைப் பற்றி நமக்குத் தெரியும். டி.என்.இமாஜானைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.

கவிஞர் சலீமை “நாகூரின் தாகூர்” என்று புகழ்வார்கள். ஆனால் இவரை நாகூரின் அழ.வள்ளியப்பா என்பதா அல்லது நாகூரின் தமிழ்வாணன் என்பதா என்று அடைமொழி இடுவதில் எனக்கு பெரும் குழப்பம். நேரு மாமா போன்று இவருக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம் போல. அதனால்தான் குழந்தைகளுக்காக நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.என். இமாஜான் ஒரு குட்டி தமிழ்வாணன். “Master of All Subjects” என்று கூட சொல்லலாம். சிங்கையில் இருந்துக்கொண்டு சங்கத்தமிழ் நாதம் எழுப்பிக்கொண்டு, சந்தைப் படுத்தத் தெரிந்த சிந்தைக்கினியவர்.  நூற்றுக்கு மேலான நூல்கள் எழுதியிருக்கிறார். ஒண்ணேகால் சதம் நெருங்கி விட்டதாகக் கேள்வி.

நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு and What Not..? 2006-ஆம் ஆண்டு, இவர் எழுதிய 40 நூல்களை சிங்கப்பூரில் ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கத் தெரிந்த சீரான ஆய்வாளர், தமிழாசிரியர்.

15.08.2015 தேதியன்று சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி டாக்டர் டி,என்,இமாஜான் எழுதிய 100 நூல்களில் வெளியீட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னை புதுக்கல்லூரி மாணவர்.  திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த வசனகர்த்தா தூயவன் இவரது தாய்மாமன். இவர்களது பரம்பரையில் வந்த எழுத்துலக வேந்தர்கள் பட்டியலிட்டு புகழ் பாடினால் பக்கங்கள் காணாது.

எதுகை மோனையுடன் கூடிய இவருடைய நூலின் தலைப்புகளைப் படித்தால் அதுவே ஒரு கட்டுரை போல் இருக்கிறது. உள்ளடக்கம் என்னவென்பதை இவருடைய நூலின் தலைப்பே காட்டிக் கொடுத்துவிடும். லேனா தமிழ்வாணனுடன் இணைந்து பல நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்..

இவரிடம் சென்று “எங்கே நீங்கள் எழுதிய நூல்களின் தலைப்பை வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்?” என்று கூறிப் பாருங்கள். அவர் “பெக்கெ..பெக்கெ..” என்று பாண்டியராஜன் போன்று முழிப்பது நிச்சயம்.

வார்த்தையை மடக்கி எழுதத் தெரிந்தாலே “கவிஞர்” என்று அடைமொழி இட்டுக் கொள்வதும்,  தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொள்ளும் நபர்கள் நிறைந்த இந்த உலகத்தில் இவரைப் போன்ற சிலர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதிப் புரட்சி செய்வது பாராட்டத்தக்கது.

குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டிய சிலர் இன்னும் குடத்திலிட்ட விளக்காக இருப்பது துரதிருஷ்டமானது.

(பின்குறிப்பு: மேலேயுள்ள புகைப்படம் 3D புகைப்படம் அல்ல. சாதாரணப் புகைப்படம்தான். ஆனாலும் முனைவர் பேரா. நத்தர்சா மரைக்கார் அவர்களுடைய பதிவிலிருந்து திருடி ‘கிராப்’ வெட்டி அடியேன் பதிவேற்றம் செய்தது.  அன்னார் என்னை மன்னிப்பாராக)

முனைவர் டி.என்.இமாஜான் பதிவிட்ட நூல்களை இங்கும் அங்கும் தேடி ஓரளவு வரிசைப்படுத்தி இருக்கிறேன். விட்டுப் போனது இன்னும் உண்டு:

டி.என்.இமாஜான் இதுவரை எழுதியுள்ள நூல்கள்!

1. குண்டக்க மண்டக்க ஜோக்ஸ்
2. எடக்கு மடக்கு ஜோக்ஸ்
3. குழந்தைகளுக்குப் பிராணிகள் சொல்லும் ஜோக்ஸ்
4. பழமொழி ஜோக்ஸ் பாகம் -1
5. பழமொழி ஜோக்ஸ் பாகம் – 2
6. பேய் ஜோக்ஸ்
7. இமாஜான் ஜோக்ஸ்
8. ஆஸ்பத்திரி ஜோக்ஸ்
9. புருஷன்-பொண்டாட்டி ஜோக்ஸ்
10. சிரிப்பாய்ச் சிரியுங்கள்
11. நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்
12. செய்திகள் தரும் சிரிப்புகள்
13. சிறுவர் சிந்தித்துச் சிந்திய சிரிப்புகள்!
14. கணிப்பொறியில் சிரிப்புப் பொறிகள்!
15. வயிறு வலிக்கச் சிரிக்கலாம் வாங்க!
16. கெக்கெக்கெக்கே…! கெக்கெக்கெக்கே…!
17. கிச்சு….! கிச்சு…!
18. தமாஷோ தமாஷ்!
19. படித்தாலே சிரிப்புதான்!
20. மிஸ்டர் நையாண்டி!
21. பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்!
22. இருமுறை சிரிக்க இரட்டைச் சிரிப்புகள்!
23. ரசித்துச் சிரிக்க சினிமா பற்றிய சிரிப்புகள்!
24. ஒரே ஒரு வார்த்தையில் பலவகை சிரிப்புகள்!
25. சிரிப்புச் சொட்டும் ஒரு பக்கக் கதைகள்!
26. ஒரு பூந்தோட்டத்தில் பல பட்டாம்பூச்சிகள்! (கவிதைகள்!)
27. வாங்களேன்! சிரிங்களேன்
28. படிக்கலாம்! சிரிக்கலாம்!
29. சிரிக்கத்தான் வாரீகளா!
30. சிரிப்பு மழை!
31. சிறப்பான வாழ்க்கைக்குச் சிந்தனை முத்துக்கள்!
32. நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!
33. நகைச்சுவையூட்டும் நாடகங்கள்!
34. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-1
35. பழமொழியும் நகைச்சுவையும் பாகம்-2
36. புன்னகை பூக்கும் கவிதை மின்னல்கள்!
37. பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள்!
38. இதழ்களில் எழுதிய இன்சுவைப் படைப்புகள்!
39. இனிமையில் நனைந்த கவிதை நறுக்குகள்!
40. குறும்பு கொப்பளிக்கும் கேள்வி – பதில்கள்!
41. சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!
42. சிரித்துச் சிந்திக்க சிந்தனை மொழிகள்!
43. புன்னகை மன்னன் பராக்! பராக்!
44. குறுஞ்செய்திக் குறும்புகள்!
45. நகைச்சுவை தரும் நன்மைகள்!
46. சிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்!
47. மூளையை முடுக்கிவிடும் முத்தான புதிர்கள்!
48. வாய் வலிக்கச் சிரியுங்கள்!
49. சிரிப்புக்குப் பஞ்சமில்லை!
50. சிரிக்கும்வரை விடமாட்டேன்!
51. எழுத்து விளையாட்டு!
52. வார்த்தை விளையாட்டு!
53. உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
54. சிந்தையைச் சீண்டும் சுடோகுப் புதிர்கள்!
55. விவேகமான விடுகதைகள்!
56. சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
57. அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்!
58. சிரித்தாலே இனிக்கும்!
59. சுட்டிகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
60. சிரிப்பூட்டும் செய்திகள்!
61. நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள்!
62. வேடிக்கையான வினாடி-வினா!
63. பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
64. மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
65. நகைக்க வைக்கும் நாட்டு நடப்புகள்!
66. சிந்திக்கச் செய்யும் சுடோகுப் புதிர்கள்!
67. தம்பி தங்கைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
68. இளையர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
69. பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!
70. நகைச்சுவைக் கதம்பம்!
71. கணக்கிட்டு நிரப்பும் காக்குரோ புதிர்கள்!
72. கூட்டலால் நிறைக்கும் காக்குரோ புதிர்கள்!
73. ஒரேயொரு வார்த்தையில் பலவகைப் புதிர்கள்!
74. ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள்!
75. சிரிப்பூக்கள்!
76. சாமுராய் சுடோகுப் புதிர்கள்!
77. சிந்தித்துப் பூர்த்திசெய்ய சாமுராய் சுடோகு!
78. இருமுறை சிந்திக்க இரட்டைப் புதிர்கள்!
79. பலவகையில் யோசிக்க இருவகைப் புதிர்கள்!
80. குசும்பு கொப்பளிக்கும் கேள்வி-பதில்கள்!
81. புத்தியைப் புடமிடும் ஃபுடோசிகிப் புதிர்கள்
82. புத்தியைப் புதுப்பிக்கும் புதுமையானப் புதிர்கள்!
83. வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்!
84. சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள்!
85. வாய் விட்டுச் சிரிங்க! (சிரிப்பு மஞ்சரி)
86. பொது அறிவை வளர்க்கும் விநாடி-வினா-விடை!
87. அறிவைச் செறிவூட்டும் அறியாச் செய்திகள்!
88. இலக்கியத்திறன் வளர்க்கும் இன்பத்தமிழ்ச் செய்திகள்!
89. படிப்பினையூட்டும் பல்சுவைக் கேள்வி-பதில்கள்!
90. தயவுசெய்து சிரியுங்கள்!
91. உங்களைப் பண்படுத்தும் உன்னதப் பொன்மொழிகள்!
92. உலகறிவை ஊட்டும் ஏராள வினாடி=வினா!
93. அறிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் வினா-விடைகள்!
94. வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்!
95. பிரபலங்கள் செய்த குறும்புகள்!
96. விளையாட்டு வினாடி-வினா-விடை!
97. திரைப்படத் தகவல்களில் வினாடி-வினா-விடை!
98. பொது அறிவுப் பூங்கா!
99. சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்!
100. சிரிக்காவிட்டால் விடமாட்டேன்!
101. சிரிப்போ சிரிப்பு (குலுங்கக் குலுங்கச் சிரிங்க!)
102. சமர்த்தாய் யோசிக்க சதுரக் கட்டப் புதிர்கள்!
103. நாட்டுப்புற இலக்கியத்தில் இனிய விஷயங்கள்!
104. எளிமையான இலக்கண விருந்து! (நன்னூல்-எழுத்ததிகாரம்)
105. அறிவார்ந்த கேள்விகளும் ஆக்கபூர்வ பதில்களும்!
106. சத்தம்போட்டுச் சிரிக்க – சிரிக்க!
107. தமிழக வரலாற்றில் தலையாயத் தகவல்கள்!
108. காப்பிய – நீதி இலக்கியங்களில் கருத்தான விஷயங்கள்!
109. எண்களால் அமையப்பெற்ற எண்ணற்றப் புதிர்கள்!
110. சிங்கப்பூரில் நடந்த சிரிப்புச் சம்பவங்கள்!
111. விகடத்தில் விளைந்த வார்த்தை ஜாலங்கள்!
112. உங்களுக்கு ஊக்கமளிக்கும் உயர்வானப் பொன்மொழிகள்!
113. நன்னூல் சொல்லதிகாரத்தில் சொல்லத்தக்கச் செய்திகள்!
114. தமிழ்மொழி இயலின் போக்கில் அறிவியல் விஷயங்கள்!
115. கரும்பாக இனிக்கும் குறும்புகள்!
116. கத்திச் சிரிக்க சிரிப்புக் கொத்து!
117. துளித்துளியாய் கவிதைத்துளிகள்!
118. களிப்பூட்டும் துளிப்பாக்கள்!
119. சிலிர்ப்பூட்டும் சின்னஞ்சிறு கவிதைகள்!

120. கருத்தான கேள்விகளும் கரும்பான பதில்களும்!
121. புன்சிரிப்பூட்டும் சென்ரியூ கவிதைகள்!
122. மொழி பெயர்ப்போருக்கான முக்கிய ஆலோசனைகள்!
123. சங்க இலக்கியத்தில் சுவையான சங்கதிகள்!
124. உள்ளே போங்க நல்லா சிரிங்க!
125. இமாஜானின் சிரிப்புச் சேட்டைகள்!
126. ஒன்று முதல் நூறுவரை ஒருங்கிணைந்த தகவல்கள்!
127. தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான தகவல்கள்!
128. கவிதைகளில் காணப்பெறும் இலக்கண இனிமைகள்!
129. கடந்த ஆண்டுகளில் நடந்த உயர்வான சம்பவங்கள்!
130. சிறப்புப்பெயர்கள்-புனைபெயர்கள் பற்றிய சுவையான தகவல்கள்!
131. முதன்முதலாக நடந்த முக்கியச் செய்திகள்!
132. அடைமொழிப் பெயர்கள் பற்றிய அருமையான தகவல்கள்!
133. திரைப்படங்கள் பற்றிய தெரியாத தகவல்கள்!
134. தமிழ்த்தேன் துளிகள்!
135. முத்து முத்தான மூன்றடிக் கவிதைகள்!
136. கருத்தைக் கவரும் கடுகளவுக் கவிதைகள்!
137. இக்கால இலக்கியத்தில் இனிய பக்கங்கள்!
138. பக்தி இலக்கியத்தில் சுவையான பகுதிகள்!
139. பொறிப்பொறியாய் கவிதைப் பொறிகள்!
140. இமாஜானின் இனிய குறும்புகள்!
141. குதூகலமூட்டும் குறுங்கவிதைகள்!
142. படித்தவையில் பிடித்தவை!
143. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்!
144. ஒரேயொரு வாக்கியத்தில் இருநூறு கதைகள்!
145. பள்ளிக்கூடச் சிரிப்புகள்!
146. அப்துல் கலாமின் அறிவார்ந்த சிந்தனைகள்!
147. கேட்கப்படாத கேள்விகளும் கேள்விப்படாத பதில்களும்!
148. எண்களின் அடிப்படையில் எக்கச்சக்க விஷயங்கள்!
149. பலவகை எண்களில் பல்சுவைத் தகவல்கள்!
150. சிரித்துவிட்டால் விட்டுவிடுவேன்!
151. இஸ்லாமியச் சார்பில் இனிமைச் செய்திகள்!
152. உங்களின் உயர்வுக்கான உன்னதக் கேள்வி – பதில்கள்!
153. பொன்னான பெண்மொழிகள்!
154. படித்தேன் படி-தேன்
155. தேசத்தந்தைகளின் சீரிய சிந்தனைகள்!
156. பேசாமல் சிரியுங்கள்!
157. ஆண்கள் பற்றிய அருமையான மொழிகள்!
158. பொது அறிவுக்குப் புதுவிருந்து!
159.. பொதுஅறிவுப் புதையல்!
160. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி பதில்கள்!
161. புதிரான கேள்விகளும் புதிதான பதில்களும்!
162. இல்லத்தில் உதவும் நல்ல குறிப்புகள்!
163. விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்!
164. மலைக்க வைக்கும் மனிதர்கள்!
165. எள்ளலான லிமரைக்கூ கவிதைகள்!
166. அறிந்திராத கேள்விகளும் அறிஞர்களின் பதில்களும்!
167. பறவைகளைப் பற்றிய பல்சுவைச் செய்திகள்!
168. சிலேடைச்சொல் விளையாட்டு!
169. சொற்சிலம்ப விளையாட்டு!
170. அழகான ஹைபுன் கவிதைகள்!
171. எந்த நாடு? என்ன பேரு?
172. குறும்பான குக்கூ கவிதைகள்!
173. பூச்சிகளைப் பற்றிய புதுமையான செய்திகள்!
174. பகடியான பழமொன்ரியு கவிதைகள்!
175. நொடிக்கதைகள் – 100
176. சிறப்பான தலைப்புகளில் சிறந்தோரின் சிந்தனைகள்!
177. வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துகள்!

178. வாழ்க்கைக்கு வலிமையூட்டும் கேள்வி-பதில்கள்!
179. பொன்மொழிச் சிரிப்புகள்!
180. இரசனையான வசன கவிதைகள்!
181. காதலைப் பாடும் கஜல் கவிதைகள்!
182. தெரிந்த பிரபலங்களும் தெரியாத சம்பவங்களும்!
183. தெரியாத பிரபலங்களும் தெரியவேண்டிய சம்பவங்களும்!
184. அரும்பெரும் அறிஞர்களும் அறிவூட்டும் சம்பவங்களும்!
185. மிகச்சிறுகதைகள்!

  • #அப்துல்கையூம்

 

 

One response to “குடத்திலிட்ட விளக்குகள்

  1. அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

    January 29, 2020 at 8:41 pm

    வியப்பு!
    சிறப்பு!!

    ‘டி.என்.இமாஜானைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது’

    -இதையே,
    ‘டி.என். இமாஜானைப் பற்றி நம்மில் சிலர் அறிந்திருக்கக்கூடும்’
    என்று பதிவு செய்யதால் பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து!

    ( http://www.nizampakkam.blogspot.com)

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: