RSS

Tag Archives: நாகூர் ஹனிபா

தமிழகத்து தான்சேன் பிறந்த தினம்


25 டிசம்பர்

இன்னிசை பிறந்தது
மூங்கிலின் உராய்விலா?
எனக்குத் தெரியாது.

தமிழகத்து தான்சேன்
தரணியில் பிறந்தது
இன்றுதான் என்று
எனக்குத் தெரியும்.

நாயகப் பெருமான் புகழ்
நற்றமிழில் பாடி
தாயகத்திற்கு பெருமை சேர்த்த
தன்மான கவரிமான்

பண் பாடி சிறந்த
வெண்தாடி வேந்தன்

கண்ணியம்சேர்
கறுப்புச் சூரியன்

இனபேதம் மதபேதம் காணாது
சங்கநாதம் முழங்கிய
சிங்கக் குரலோன்

சமயம் கடந்த
சங்கீத இமயம்

எட்டுக்கட்டை தொனியில்
எட்டுத்திக்கும் இவன்குரல்
இன்றும் கேட்கும்
என்றும் கேட்கும்

ஒலிபெருக்கியே மிரளும்
ஒரே மனிதன்
இவனாகத்தான் இருக்கும்

இஸ்லாமிய இசையில்
இவன் தொட்ட சரணம்
எட்டிப் பிடிக்க
இதுவரையில்லை ஜனனம்

பாட்டால் கலகம்
விளைவித்தோர் உண்டு – இவன்
பாடியே கழகம் வளர்த்த
திராவிடக் காளை

முப்பால் புகழ்
முத்தமிழ் கானத்தை
ஏழுகடலுக்கு அப்பால்
எட்டிவைத்த சிறப்பால்
இவனை நாம் போற்றுகிறோம்

வெல்லமென இனிக்கும்
இவன் குரல்
இல்லம்தோறும் இசைக்கும்

நிகழ்காலம் இவனை
நினைக்குதோ இல்லையோ
வருங்காலம் நிச்சயம்
வாழ்த்திப் பேசும்

அன்று முதல் இன்று வரை
ஒரே கட்சி
கூடு விட்டு கூடு மாறா
கொள்கையுள்ள பட்சி

இந்த
கறுப்புச் சூரியனின்
கன்னித் தமிழுக்கு
ஏதோ ஒரு கம்பீரம்.

இந்த
பச்சைத் தமிழனின்
‘நச்’சென்ற
உச்சரிப்பில்
நமக்கெல்லாம்
நரம்புகள் புடைக்கும்.

‘முரசு’ ஒலித்தால்
நரம்புகள்
புடைக்கத்தானேச் செய்யும் ?

இவன்
வாயிலிருந்து புறப்பட
வார்த்தைகள்
வரம் பெற்று வந்து
இவனை
வலம் வரும்.

ஆர்மோனியக்
கட்டைக்குள்
அடங்காத
எட்டுக்கட்டை குரல்
இவன் குரல் !

இவன்
பாடிடும் பாணி;
பாமரன் மனதிலும்
பதித்திடும்
பசுமரத்தாணி !

தொப்பி யணிந்த
இவன்
தமிழிசைக்கு கட்டியதோ
தலைப்பாகை !

இன்னிசையில்
இவன் சூடியதோ
வெற்றி வாகை !

நாகூரின்
அடைப்புக்குறிக்குள்
இந்த இசைவாணனின்
நாமமும்
நாடெங்கும்
நினைவுறுத்தும்.

வாழ்வாங்கு வாழ
வளமோடு வாழ
வாழ்த்தும் என் இதயம்

 

Tags:

When his life was a song


Nagore_Hanifa

Nagore E.M. Hanifa’s distinctive voice took him from a humble background to the centre stage in no time, but it is his son who narrates the 95-year-old’s back story

The elderly gentleman takes a minute to arrange his lambswool cap on the silver locks lovingly combed by his son. His white full-sleeved shirt and veshti are crisp and starched. He looks at his son for approval and smiles when he sees the two thumbs-up sign. Nagore E.M. Hanifa is ready for his Kodak moment.

At 95, ‘Isai Murasu’ Esmail Mohamed Hanifa is a shadow of the man that followers of Tamil Muslim devotional music and political anthems know. The prolonged exposure to stage noise has affected his hearing permanently, and he rarely speaks to visitors these days. But as his eldest son and chief care-giver Naushad Ali points out, “sometimes a word is enough to trigger a memory.”

Much is known about Hanifa’s rise to fame as the ‘voice’ of the Dravida Munnetra Kazhagam (DMK) and his proximity to leaders such as Periyar, C.N. Annadurai and M. Karunanidhi. Many Tamil commentators have tried to theorise on why Hanifa was not as successful a politician as a singer, despite a fan base of millions in his heyday.

As Nagore Hanifa spends his twilight years at home in Kotturpuram, Chennai, the story of the man whose voice used to hit the high and base notes with equal ease, gets retold by his son.

“My paternal grandfather and my father’s elder brother were both good singers, but they didn’t take it up as a profession. My grandfather was based in Malaysia, working in the railways, but was unable to provide for his family in Nagore. So, to support the family income, my father became a singer. He held his first concert at Tiruvaluntur, Thanjavur district, at the age of 13, on a bullock cart which was both stage and band transport,” says Ali.

Full-throated singing

The early concerts were held at homes, during weddings and prayer ceremonies, and slowly shifted to the dargahs, shrines built around the tombs of Muslim saints, which follow secular rituals.

Scholar Abidin at the Ghoudia Bait-us-Sabha at Nagore would write the lyrics for Hanifa, that would be sung during wedding processions. The completely self-taught maestro picked up tips on Carnatic music from S.M.A. Qadir at the Nagore dargah (formally known as Hazrat Syed Shahul Hameed Dargah).

Singing during wedding processions taught him an important skill: how to throw his voice without a microphone. “Unfortunately most of those songs were not preserved in any form; people would write them on bits of paper which would be set to the tune of the most popular Hindi film hits of the day, and performed,” recalls Ali. “Recording music was not as common then as now; besides, copyright was not a problem.”

As his fame grew, Hanifa sang at as many as 45 concerts in a month. “The free copyright and the absence of a serious rival meant that my father was always on the road,” says Ali. “He’d take time only to rehearse the new songs – the rest he’d do from memory. My father kept everything simple – managing his own concert appointments, keeping only around four to five musicians, and using lyrics that were easy to remember. He’d be the sole singer on stage for up to four hours, which is quite unthinkable these days.”

Hanifa, who spent his early childhood in his mother’s hometown of Ramanathapuram, later went to work for his paternal uncle Abu Bakr Rowther in Tiruvarur. It was during this period, in his early teenage years, that he struck up a friendship with Muthuvel Karunanidhi, who was gaining a reputation for oratory even as a schoolboy.

Haniffa & Naushad

“My father used to sing before the lecture meetings organised by Karunanidhi, without any musical accompaniment or payment, to attract the crowds on the dry riverbed of the Odampokki river in Tiruvarur,” says Ali. The two nonagenarians are said to share warm vibes till today, and the tenth state-level DMK conference held in Tiruchi in February was the first one that Hanifa missed since the party was launched in 1949.

Politics and films

Hanifa’s rousing anthems boosted the fortunes of the Dravida Munnetra Kazhagam from the 1930s. HisOadi varugiran Udhayasooriyan, Kallakkudi konda Karunanidhi vaazhgave, Nee engae senrai Annaand Azhaikkinrar Anna are still used by the DMK to raise party morale.

Even so, fans of his voice, at once stentorian and artistic, cut across party lines, says Ali.

It was not long before the cinema industry came calling. “But my father was not open to suggestions from film composers to adopt a more secular name like ‘Kumar’ – ‘it’s more satisfying to sing four songs as Hanifa than a crore songs as Kumar,’ he’d say – and moreover, the timbre of his voice was too strong for the image of the heroes who were in vogue then,” says Ali.

He sang in Tamil films such as Gulebakavali (1955) and Paava Manippu (1965), before returning full-time to political anthems and devotional music. In the 1970s, says Ali, a young composer called Rasaiyya was assigned by recording company His Master’s Voice (HMV), to work with Nagore Hanifa on the song Thendral Kaatre Konjam Nillu. The tune, composed on Hanifa’s own harmonium, was a big hit for the duo. Later, the same composer, now more famous as Ilayaraja, persuaded him to render the haunting Kadalulile Thanimaiyile number for the 1992 film Chembaruthi.

“Most of my father’s songs were universally accepted in an age when the public relations industry did not exist,” says Ali. “Iraivan Idam Kai Yenthungal was being sung everywhere – by beggars on trains, and in the grandest of stage shows, simply because the tune and lyrics were so apt yet catchy.”

Man of principle

Nagore Hanifa married late (by Tamil Muslim standards), past the age of 30. His wife, A.R.Roshan Begum, looked after the couple’s six children in Nagore while Hanifa continued building up his career. “To us children, Nagore E.M. Hanifa was just a singer who was away a lot, and when at home, a very strict father,” recalls Ali. “But it is only now, when we see the reception that he gets in public, and when we are parents ourselves, that we realise what a great person he is. And maybe he was strict (forbidding the children from taking up music lessons, for instance), because he wanted us to focus on our studies,” says Ali, who went on to earn a Masters degree in English Literature. “No matter how busy he was, my father made sure we were all looked after.”

Today the roles have reversed as Ali, who is slowly making his name as a singer, has taken over the care of his ageing father. “I have cut down my own public engagements so that I can stay close by,” Ali reveals, adding that he still hasn’t picked up the courage to perform in front of his father or reveal that he had stealthily learned how to play keyboard and guitar in his youth despite his father’s disapproval.

“We had been estranged for years when the onus of looking after my father fell on me,” says Ali. “My mother had died, and I shifted to Chennai from Madurai, quitting my job as a marketing executive, so that I could make him as comfortable as possible in his old age. Luckily my wife and children supported my decision. It’s an honour for me to be able take care of him.”

As to why Nagore Hanifa never made it in politics, despite contesting elections as a DMK candidate twice (in 1958 and 2002) and becoming chairman of the state Waqf Board (2007), Ali has a simple answer: “He refused many posts because he felt he was not educated enough for the job. And moreover, Nagore Hanifa was not a man who believed in back-scratching and favouritism, so he knew his growth in politics would entail compromise.”

Hanifa’s fame came with its own pitfalls – especially a large number of imitators, some of whom even tried to pass themselves off as his sons. “There may be many copycats, but there’s only one Nagore Hanifa,” asserts Ali.

Thanks to: The Hindu

logo

 

Tags: , , ,

நாகூர் ஹனிபாவைப் பற்றி மு.க.ஸ்டாலின்


stalin

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களைப் பற்றி கேட்டபோது : 

இசைமுரசு நாகூர் ஹனிபா.. பெயரைச் சொன்னதும் உங்களுக்கு நினைவு வருவது எது?

 “ஓடி வருகிறான் உதயசூரியன்”

“அழைக்கின்றார் .. அழைக்கின்றார் அண்ணா”

 “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

 “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

 “வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா”

என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’. அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து இரண்டறக் கலந்து விட்டார்கள். திராவிட இயக்கம் இருக்கும்வரை அதன் செவிகளில் தூரத்து இடிமுழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் போரொலி எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

 

Tags: , ,

Nagore E.M.Haniffa Photos


Nagore E.M.Haniffa

Nagore E.M.Haniffa at Y.M.T.K.Function years before

E.M.Haniffa YMTK Function years before

Nasar daughter marriage 2

On 10.3.2013 sunday at 11.30 during his grand daughter’s marriage .

Nasar daughter marriage

During E.M.H.Nasar’s daughter Marriage on 10.03.2013

 

Tags: , ,

நாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)


 
“நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா” என்று இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்ததற்கு பதிலாக “பிழைக்கத் தெரியாத நாகூர் ஹனிபா” என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே என்று என் நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு காரணம் நாகூர்  ஹனிபா மீது அவர்களுக்கிருந்த கோபமா? அல்லது கலைஞர் மீது அவர்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பா என்று கண்டறிய நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.

அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால் நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும், கட்சித் தலைமையோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாரோ என்ற சந்தேகமும் நம் மனதில் எழுந்து தொலைகின்றது.

கலைஞர் அவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து “ஏன் நீங்கள் நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி கொடுக்கவில்லை?” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை?” என்று ஏன் நாம் கேட்கக் கூடாது?

நாகூர் ஹனிபா அவர்கள் “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனப்பக்குவத்துடன் பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டாரா? அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா? அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா? என்று தெரியவில்லை.

இசைத்துறையில் தனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசியலில் கிடைக்காது என்ற காரணத்தினால்கூட இருக்கலாம் அல்லவா?

இந்த வாதத்தை நாம் முன் வைப்பதால் கலைஞர் – நாகூர் ஹனிபா இருவருக்கும் இடையிலான நட்புறவில் கலைஞர் அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. இதோ அந்த நிகழ்வு நாம் சொல்லவரும் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.

இசைமுரசு அவர்கள் தனக்குச் சொந்தமான “அனிபா லாட்ஜ்” கட்டிடத்தை கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவுக்கு கலைஞர் அவர்களை அழைத்தபோது, வருவதாக வாக்களித்திருந்த கலைஞர் அவர்கள் வேண்டுமென்றே வரவில்லை. அதற்கு காரணம் அதையொட்டி நடைபெறவிருந்த தேர்தல்.

பெருமளவில் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார் கலைஞர். இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டு பெருந்திரளான கூட்டத்தை திரட்டத் தவறினால் எங்கே தன்னுடைய ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டு விடுமோ என்று தயங்கிய கலைஞர் நாகூர் வருவதை ரத்து செய்து விட்டார். கடைசியில் சாதிக் பாட்சா, ஆ.கா.அப்துல் சமது, மதுரை ஆதீனம் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ஹனிபா.

நட்புதான் பெரிது என்று கலைஞர் மனதார நினைத்திருந்தால் தஞ்சாவூர் வரை வந்த தானைத்தலைவர் தாராளமாக ‘இமேஜ்’ எதையும் பார்க்காமல் நண்பரின் அழைப்புக்கு இணங்கியிருக்கலாம். நாகூர் ஹனிபாவுக்கும் அது பெருமையாக இருந்திருக்கும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள் என்பதை இந்தப் பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் அனைவரும் எழுத்துலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் கைதேர்ந்த தமிழார்வலர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுப் பொருத்தமா அல்லது கலைஞர் அவர்கள் இஸ்லாமிய அன்பர்களுடன் நட்புறவு கொள்வதை மிகவும் விரும்பினாரா என்பது ஆராய வேண்டிய விஷயம். கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமியச் சமூகத்தினர் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்ததை நாம் மறுக்கவோ மறக்கவோ இயலாது. இன்றளவும் நாகூர் ஹனிபாவைப் போன்று எத்தனையோ இஸ்லாமியச் சகோதரர்கள் கலைஞரின்  Diehard விசுவாசிகளாக இருக்கிறாகள் என்பது கண்கூடு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக முஸ்லீம் லீகை பிளவு படுத்தினார் என்பது உண்மையாக இருந்தபோதிலும், கலைஞர் செய்தது ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்று சிலர் கருதுகிறார்கள்.

கூட்டணிக் குடையின் கீழ் ஆட்சியின் பீடத்திலிருந்து அவர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்களை எதிர் அணியில் இருந்துக் கொண்டு சமுதாயப் பிரச்சினைக்கு வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் ஒன்றிணைந்து செயலாற்றும் இத்தனை இஸ்லாமிய அமைப்புகளை நினைத்தால் நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

“முஸ்லீம் லீக்” என்ற கட்சி உட்பூசலின் காரணமாக பெரிதாக எந்த ஒரு சமுதாய சீர்திருத்தத்தையோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடியோ சாதனை படைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக நிலவுகிறது. இதனை என்னால் மறுக்க முடியவில்லை என்பதும் உண்மை.

கலைஞர் அவர்களுடைய பொதுவாழ்க்கையில் அவருக்கு தோளோடு தோள் நின்று, அவருடைய இன்ப துன்பங்களில் பங்கு பெற்று, பொருளாதார உதவியும், தொழில் ரீதியான முறையில் உதவிகளும் புரிந்து, கலைஞர் அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவர் தொடர்பு வைத்திருந்த திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த முஸ்லீம் அன்பர்கள் பலரைச் சாரும்.

கமால் பிரதர்ஸ், கவி.கா.மு.ஷெரீப், கருணை ஜமால், சாரணபாஸ்கரன், கலைமாமணி காரை எஸ்.எம்.உமர், நாகூர் ஹனிபா, நாவலர் ஏ.எம்யூசுப், ஆ.கா.அ.அப்துல் சமது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கட்டுரையின் மையக்கருத்தை விட்டு சற்றே விலகி கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இந்த இஸ்லாமிய நண்பர்கள் பத்திரிக்கைத் துறையில் எவ்வாறு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள் என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

நாகூர் ஹனிபாவுக்கும் பத்திரிக்கைத் துறைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத போதிலும் அவருடன் நெருங்கிப் பழகிய நாகை, திருவாரூர், காரைக்கால் வட்டார இஸ்லாமிய நண்பர்கள் பலர் பத்திரிக்கைத் துறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு அறிஞர் தாவுத்ஷா அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் (as a Role Model) திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

“அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்” என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு – இவைகள்தான் எங்கள் கைகளை அலங்கரிக்கும்”

என்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சொன்னதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையின் ஆசிரியர்தான் தாவூத் ஷா.

Dawood Shah

1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “தாருல் இஸ்லாம்” என்ற மாத இதழ், அக்காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு முன்னோடி இதழாகத் திகழ்ந்தது.

கலைஞர் அவர்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவதற்கு “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழானது, தலையங்கம், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, ‘கேள்வி-பதில்’ பகுதி, வாசகர் கடிதம், துணுக்குகள் என்று அத்தனை பல்சுவை அம்சங்களுடன் அவ்விதழ் மக்களைக் கவர்ந்தது. ‘தத்துவ இஸ்லாம்’, ‘முஸ்லிம் சங்கக் கமலம்’, ‘தேவ சேவகம்’, ‘ரஞ்சித மஞ்சரி’ போன்ற பல இதழ்கள் நடத்திய அனுபவம் அவருக்குண்டு.

தினத்தந்தியில் சிந்துபாத் கதை வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றிருந்ததை நாமெல்லோரும் அறிவோம். முதன் முதலாக ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தாவூத் ஷா. அதற்குப்பின்னால் அரேபியக் கதைகளின் Fantasy அம்சங்களை திரைப்படங்களில் குலேபகவாலி, நாடோடி மன்னன், பாக்தாத் பேரழகி போன்ற படங்களில் புகுத்திய பெருமை திரைப்பட வசனகர்த்தா நாகூர் ரவீந்தரைச் சேரும்

“பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் தாவுத்ஷா அவர்களின் பத்திரிக்கை தர்மத்தையும் அவரது தொழில் பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

அக்காலத்தில் பிராமணச் சமூகத்திற்கு இணையாக, பத்திரிக்கைத் துறையில் இஸ்லாமியர்கள் காலூன்றி தடம் பதித்திருந்தார்கள் என்ற கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களை இங்கே கோடிட்டுக் காட்ட முடியும்.

[19-ஆம் நூற்றாண்டிலேயே (1880-களில்) நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ‘வித்தியா விசாரிணி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.]

கீழை நாடுகள் மற்றும் பிரஞ்சு நாட்டில் வியாபாரத் தொடர்பை வளர்த்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இங்கு சொந்தமாக அச்சகங்கள் துவங்கியதால் அவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்தது. [நாகூரைச் சேர்ந்த தளவாய் சின்னவாப்பா மரைக்காயர் ‘ரபீக்குல் இஸ்லாம்’ (இஸ்லாமிய நண்பன் என்று பொருள்) என்ற வார இதழை 1905-ஆண்டு சிங்கப்பூரில் நடத்தி வந்தார் என்பது மற்றொரு கொசுறு செய்தி]

காரைக்காலிலிருந்து 1944-ஆம் ஆண்டு முதல் “பால்யன்” என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் உ.அபூஹனிபா என்பவராவார். “மணிச்சுடர்” ஆ.கா.அப்துல் சமது, நாவலர் “மறுமலர்ச்சி” யூசுப், “சாந்தி விகடன்” அ. மு. அலி, எஸ்.எம்.உமர், வடகரை எம்.எம்.பக்கர், ஓவியர் காரை பக்கர் போன்றவர்கள் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பால்யன் இதழே.

காரைக்காலில் 1940-களில் நடத்தப்பட்ட “கதம்பம்:, “இளம்பிறை” , “முஸ்லீம் லீக்” போன்ற இதழ்களிலும் ஆ.கா.அ. அப்துல் சமது எழுதி வந்தார்.

“பால்யன்” இதழை முதலில் தொடங்கியவர் காரை அ.மு.அலி அவர்கள் . இவர், தான் ஆரம்பித்த இதழை உ.அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார். “பால்யன்” இதழ் ஒரு தரமான இலக்கிய இதழாக தமிழ்ச் சேவை ஆற்றி வந்தது.

அதன் பின்னர், ஆனந்த விகடன் போன்றே ஜனரஞ்சகமான இஸ்லாமிய சஞ்சிகை ஒன்று “சாந்தி விகடன்” என்ற பெயரில் காரைக்காலிலிருந்து காரை அ.மு.அலி வெளியிட்டார். 1960 முதல் 1963 வரை வெளிவந்த இந்த இதழ் 1963-ஆண்டில் வரலாறு மலர் ஒன்றை வெளியிட்டதுடன் நின்றுபோனது. இவ்விதழ் அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. கருத்துப்படங்களும் விகடனைப் போன்றே கேலியும் கிண்டலும் நிறைந்து காணப்பட்டது.

காரை அ.மு.அலி வேறு யாருமல்ல. கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘கலைமாமணி’ உமர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

கலைஞர் அவர்கள் தன் பழைய நண்பர்களை அறவே மறந்து விட்டிருந்தார் என்று கூற முடியாது. அவர்களை நெஞ்சில் நினைவிறுத்தி கவி கா.மு.ஷெரீப், நாகூர் ஹனிபா, காரை எஸ்,எம்.உமர் போன்றவர்களை கெளரவித்து “கலைமாமணி” பட்டம் வழங்கினார். (கலைமாமணி பட்டம் “Tom. Tick & Harry” என்று கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து அந்த விருதுக்கே மதிப்பில்லாமல் போனது வேறு கதை)

‘கலைமாமணி’ எஸ். எம். உமர், நாகூர் ஹனிபா, கலைஞர் கருணாநிதி – இம்மூவரும் ஏறக்குறைய சமவயதினர். எழுத்தாளராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இருந்த உமர் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். “இளம்பிறை” (1944), “குரல்” (1949), “உமர்கய்யாம்” (1978) போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். “ஞானசௌந்தரி”, “லைலா மஜ்னு”, “அமரகவி”, “குடும்ப விளக்கு”, “ஜெனோவா” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.

1968-ல் காரை எஸ்.எம்.உமர் “வசந்த சேனா’ என்ற வண்ணப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்தார். இப்படத்தில் பின்னணியில் முகவுரை பேசியவர் நாவலர் ஏ.எம்.யூசுப்.   1948-ல் ஏ.எம்யூசுப், அ.மு.அலி, ஜே.எம்.சாலி மற்றும் தோழர்கள் இணைந்து “இழந்த காதல்” என்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் “ஜெகதீஷ்” என்ற வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் ‘மறுமலர்ச்சி; ஏ.எம்.யூசுப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் துறையில் இவர் செய்த சாதனைக்காக, 1997-ல் கலைஞர் கருணாநிதி இவருக்கு “கலைமாமணி’ விருது அளித்து கெளரவித்தார்.

அடுத்து கலைஞர் அவர்களுக்கும் கமால் பிரதஸுக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தை ஆராய்வோம்.

தளபதி ஸ்டாலினிடம் சென்று “உங்கள் தந்தையாரின் கோபாலபுரம் வீட்டை வாங்கித் தந்தவர் கமால் சகோதரர்கள் என்று சொல்லுகிறார்களே. இது உண்மையா?” என்று கேட்டால் “யார் சொன்னது? இது என் தந்தையார், அவரே சம்பாதித்து வாங்கியது” என்பார்.

“கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும் நான் சம்பாதித்த சொத்துகள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் கலைஞர்.

“கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்” என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

‘சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் தான்.’

என்று கலைஞர் அவர்கள் அண்மையில் உணர்ச்சி பொங்க ஒரு விழாவில் பேசினார்.

ஆம் கோபாலபுரத்திற்கும் சினிமா உலகத்திற்கும் அப்படி ஓர் ஒற்றுமை. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் வங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. திரைப்படத்துறைக்காக அடகு வைக்கப்பட்ட விடுதான் அந்த வீடு. அதே திரைப்படத்தால் மீட்கப்பட்ட வீடுதான் அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே. இன்று கமால் சகோதரர்கள் வாங்கித் தந்த வீட்டை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டதாக கலைஞர் அறிவிக்கிறார். இந்த வீட்டை ஒரு காலத்தில் தனது “மேகலா பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக அடகு வைத்து ஏலத்திற்கு வந்தபோது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு “எங்கள் தங்கம்” படத்தில் நடித்துக் கொடுத்து அந்த வீட்டை மீட்டுக் கொடுத்தார்கள் என்கின்ற செய்தியை நடிகர் ராதா ரவி தெரிவிக்கிறார்.

திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’ என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்தச் செய்தியை நான் அறிந்தபோது கலைஞர் தன் பழைய உறவுகளை நினைத்துப் பார்க்க மனமில்லாத கல்நெஞ்சம் கொண்ட மனிதரல்ல என்பதை உணர்ந்தேன்.

கமால் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்திருந்தால் இவர்களுக்கு பொருளுதவி செய்திருக்கக் கூடும். வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதைப் போன்று நாகூர் ஹனிபாவும் பதவியை கேட்டுப் பெற்று பயன் அடைந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

கலைஞர் அவர்களை மாடர்ன் தியேட்டர்ஸில் அறிமுகம் செய்து வைத்தது கவி கா.மு.ஷெரீப் என்பதை நாம் முன்பே ஆராய்ந்தோம். அவர் வசனம் எழுதிய ஒரு படத்திற்கு – அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக இல்லாமல் போன காரணத்தால் – படம் வெளிவந்தபோது அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கு வசனம் எழுதியபோதும் அவருடைய பெயர் இருட்டடிக்கப்பட்டு ஏ.எஸ்.எ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். இத்தனை பெரிய அவமானம் அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. மனம் நொந்துப்போன கலைஞர் அவர்கள் மீண்டும் சேலத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பத்மாவதியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு பயணமாகி வந்து சேர்ந்தார்.

“குடி அரசு” பத்திரிக்கையில் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்த படைப்புகள் மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தன. இதற்கிடையில் கலைஞர் கதை வசனம் எழுதித் தந்த “மந்திரிகுமாரி” படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பு மீண்டும் வந்தது. கலைஞரை மறுபடியும் சேலம் வரச் சொல்லி அவருடைய எதிர்காலத்தின் மீது மிகவும் அக்கறை காட்டியவர் கவி.கா.மு.ஷெரீப். கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஷெரீப்புக்கு இருந்தது. கலைஞர் அவர்களின் வசீகரப் பேச்சுத்திறனையும் கனல் தெறிக்கும் எழுத்தாற்றாலையும் நன்கறிந்திருந்தார் அவர்.

அப்போது கலைஞரின் மனைவி பத்மாவதி கர்ப்பமாக (மு.க.முத்து) வேறு இருந்தார் பணத்திற்காக கலைஞர் அவர்கள் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞர் அவர்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் பணக்கஷ்டம். இன்னொருபுறம் குறிக்கோள் எந்தி வாழ்க்கையின் ஏறுமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.

பத்மாவதிக்கு குழந்தை பிறந்தது. தனது தந்தை முத்துவேல் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்து என்ற பெயரை வைத்தார். இவர்தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக(?) திரைப்படத்தில் இறக்கிவிடப்பட்ட மு.க.முத்து. இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் பத்மாவதியும் இறந்து போனார்.

இச்சமயத்தில் கலைஞர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கருணை ஜமால். இவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழார்வலர். திருவாரூக்காரர்.

ஏற்கனவே ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக இருந்த அனுபவம் கலைஞர் அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.

துவக்கத்தில் துண்டு பிரச்சார ஏடாகவே முரசொலியானது கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் அவர்கள் தனது 18-வது வயதில் (10-08-1942) பத்திரிக்கையாக வெளிக்கொணர்ந்தார். இம்முயற்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பொருளுதவி மற்றும் சொந்த அச்சகம் இல்லாத காரணத்தினால் இது தடைபட்டுப் போனது. கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பரான கருணை ஜமால் அவர்களின் முயற்சியால் 14-01-1948 அன்று திருவாரூரிலிருந்து முரசொலி மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாக வெளிவந்த முரசொலி 17-09-1960 முதல் நாளிதழாக வெளிவரத் துவங்கியது.

நின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  தன் மனைவியிடமிருந்த நகைகள் யாவையும் அடகு வைத்து முரசொலி பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார் அவர். இருந்தபோதிலும் பத்திரிக்கை நடத்துவதென்பது அவர் நினத்ததுபோல் அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. நிறைய முதலீடும், சொந்தமான அச்சகமும் தேவைப்பட்டது.

கலைஞர் தனது எண்ணத்தை கருணை ஜமாலிடம் தெரிவித்தபோது கொஞ்சமும் தயங்காமல் கலைஞருக்கு உதவி செய்ய முன்வந்தார். கருணாநிதி எழுத்தாற்றல் மீது பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தார் கருணை ஜமால்.  கருணை ஜமால் அவர்களை கலைஞர் நினைத்துப் பார்க்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக கருணை ஜமால் இருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கும் உதவ முன்வராத காலத்தில் கருணை ஜமால்தான் கலைஞரின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார்.

முரசொலி பத்திரிக்கையின் பிரதிகளை கருணை ஜமால் அவர்களே தன் சொந்த அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்து, விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார். காலத்தினால் செய்த இந்த உதவியானது கலைஞர் அவர்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும்  பெரிதும் துணை புரிந்தது.

கலைஞர் அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் முரசொலி பத்திரிக்கை வெற்றி பெற வழி வகுத்தது. முரசொலியில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதுவதோடு நிற்காமல் அவரே பிரதிகளைச் சுமந்துக் கொண்டு திருவாரூர் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வினியோகம் செய்வார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் மக்களிடையே பிரபலமாக இருந்த போதிலும், கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது

 

Tags: , , , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)


நாகூர் ஹனிபாவை கட்சியின் கொள்கைப் பாடல்களைப் பாடும் வெறும் ஒரு கட்சிப்பாடகராக மட்டும் கருத முடியாது. கட்சித் தலைமையுடன் அன்றிலிருந்தே அவருக்கிருந்த ஆளுமை மிகஅதிகம். கட்சித் தலைமைக்கும் அவரது அருமை பெருமை நன்றாகவே தெரியும்.

கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பிறகாவது நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி அளித்து தகுந்த மரியாதை செய்திருக்கலாம். ஆனால் ஏனோ கலைஞர் அவர்களுக்கு அந்த நட்புணர்வு இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியம்.

கலைஞர் அவர்கள் தாராள மனது பண்ணி கட்சியில் நாகூர் ஹனிபாவுக்கு ஒரே ஒரு புரொமோஷன் கொடுத்தார். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆமாம். அவரை பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து உயர்த்தி செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை மனமிறங்கி அளித்தார்.

சமநிலைச் சமுதாயத்தில் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி மிகவும் நியாயமானதாக நம் மனதுக்குப் படுகிறது.

“தி.மு.க. சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. அண்ணா, அதன் தலைவராக இருந்தபோது, பொருளாளராக சாதிக் பாட்சா இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவிற்குப் பிறகு அப்பதவி சமூகநீதி அடிப்படையில் முஸ்லீம் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.

அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயளாளர் பொறுப்பை உட்கட்சிப் பூசலின் காரணமாக பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த இடத்திற்கு உடனடியாக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அதே தலித் சமூகத்திலிருந்தே இன்னொருவரைத் தேர்வு செய்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது தி.மு.க. ஆனால் இந்த அளவுகோல் ஏன் கழகத்தில் உள்ள முஸ்லீம்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நம் கேள்வி?”

என்ற வாதத்தை நம் முன் வைக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். மிகவும் நியாயமான கேள்வி.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்த தங்களுக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, பதவிகளை கேட்டுப் பெற்று, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டபோது, சுயமரியாதைக்காரரான நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாததாலேயே அவரை நாம் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று அழைக்க வேண்டியதுள்ளது.

ஓடி வருகிறான் உதயசூரியன்

நாகூர் ஹனிபா இதுவரை பாடியிருக்கின்ற கட்சியின் கொள்கைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றுப் பின்னணியில் பல சுவையான நிகழ்வுகள் மறைந்திருப்பதுண்டு. திமுகவின் தொடக்க காலத்தில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கட்சியின் தலைமைக்கு நாகூர் ஹனிபா என்ற பிரபலத்தின் காந்தக்குரல்தான் தேவைப்பட்டது.

ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆஸ்தான பிரச்சார பீரங்கியாய் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திமுகவிற்கு இரண்டு பிரபலங்கள் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். ஒன்று மக்கள் கலைஞர் எம்.ஜி.ஆர். அவர்கள். மற்றொருவர் மக்கள் பாடகர் நாகூர் ஹனிபா.

“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்று நாகூர் ஹனிபாவின் குரல் தெருக்கோடியின் ஒலிபெருக்கியில் அதிரடியாய் ஒலிக்கையில் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேற கட்சித்தொண்டன் மகுடி ஊதிய பாம்பாய் கட்டுண்டு படையெடுத்துப் போவான்.

இன்னொருபுறம், “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று படங்களில் எம்.ஜி.ஆர். வாயசைத்துப்பாடி உதயசூரியன் சின்னத்தை மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது “வேறுதுவும் வேண்டாம். தொகுதிகளில் வெறுமனே எம்.ஜி.ஆர் தன் முகத்தை காட்டினாலே போதும். ஜெயித்து விடலாம்” என்பார் அறிஞர் அண்ணா. பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி,ஆர். பிரச்சாரத்திற்கு போக இயலாதிருந்த நேரத்தில் வெறுமனே அவரது ‘கட்-அவுட்’டை காண்பித்தே அவரை ஜெயிக்க வைத்தார்கள் திமுக தொண்டர்கள்.

அதே போன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகூர் ஹனிபா நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. அவருடைய வெண்கலக் குரல் முழங்கும் இசைத்தட்டு அல்லது கேசட் போதும். ஆயிரமாயிரம் ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வர.

அழைக்கின்றார் அண்ணா

இன்று எங்கு நோக்கினாலும் தலைவர்களின் ஆளுயர கட்-அவுட்களை வைத்து “மருத்துவர் ஐயா அழைக்கிறார்” “கேப்டன் அழைக்கிறார்” “திருமா அழைக்கிறார்” “வைகோ அழைக்கிறார்” என்ற வாசகத்தைப் பொறிக்கிறார்கள். இந்த மோகஅலை (Trend) அமோகமாக பரவுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையாகாது.

“1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில் வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் வேண்டினார் ஹனிபா. அதை மறுத்த அந்த நிறுவனம், ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னது. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என்று மறுத்து, பின்னர் வென்றார் ஹனிபா. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”

என்று குமுதம் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகருக்கு அளித்த பதில் ஒன்றில் சுவையான தகவலைப் பரிமாறுகிறார் அரசு.

மற்ற பாடல்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புக்கள் இந்த பாட்டுக்கு உண்டு.

“திருவாடுதுறை இராசரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ஹனிபாவுக்கு இந்தப் பாடல்” என்று சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர்.

“‘அழைக்கின்றார் அண்ணா’ என்று ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால், திராவிட நாடு பெற்று விடுவேன்”

என அடிக்கடி குறிப்பிடுவாராம், அண்ணா என்று சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012) இதழில் குறிப்பிடுகிறார் ஆளுர் ஷாநவாஸ்.

கட்சியில் அனிபாவிற்கு இருந்த ஆளுமைக்கு இதைவிட வேறு ஒரு நற்சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.

திண்ணை இதழில் நானெழுதிய ஹனிபாவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து விட்டு அதே இதழில் திரு. மலர் மன்னன் அவர்கள்

“அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்”

என்று நான் எழுத மறந்ததை குறைப்பட்டு எழுதியிருந்தார்.

திரைப்படத்தில் முதல் சீனில் கதாநாயகனை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் ஒரு யுக்தியை பயன் படுத்துவார் படத்தின் இயக்குனர். இந்த யுக்தி இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. கதாநாயகன் ஒரு காரில் வந்து இறங்குவதாக இருந்தால் முதலில் காரின் டயரைக் காட்டுவார்கள். பிறகு காரின் கதவுகள் திறக்கப்பட்டு கதாநாயகனின் “Entry”-யை, அவரது காலணியிலிருந்து காமிரா Focus செய்யப்பட்டு கடைசியில்தான் முகம் காட்டுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரில் கரகோஷமும் விசில் சத்தமும் கூரையைப் பிளக்கும். இதே பாணியைத்தான் திமுகவினர் கையாண்டனர்.

1960களில் அறிஞர் அண்ணா கலந்துக் கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பலவிதமான யுக்திகள் கையாளப்படும். விழா மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியிருப்பார்கள். சிறுவர் முதல் பெரியோர் மட்டுமின்றி தாய்க்குலங்களும் தத்தம் குழந்தைகளுடன் அணிஅணியாகத் திரண்டிருப்பார்கள். அலங்கார வளைவும், வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், அந்த கூட்டத்திடலை விழாக்கோலம் காணச் செய்யும். மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டு இரவு 10-மணி வரை நேரத்தை இழுத்தடிப்பார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் அறிவிக்கப்படும் கமெண்டரி போன்று “அண்ணா புறப்பட்டுவிட்டார்” “அண்ணா வருகிறார்” “அண்ணா வந்துக்கொண்டே இருக்கிறார்”. “அண்ணா இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார்” “அண்ணா இதோ வந்து விட்டார்” என்று அவ்வப்போது அறிவிப்பு செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதத்தை உண்டாக்குவார்கள். மாலையில் வந்து பேசவேண்டிய ஒரு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வருகிறார் அறிஞர் அண்ணா. “மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை” என்று பேச்சைத் தொடங்கியதும் சோர்வடைந்திருந்த பொதுமக்களுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் பீறிட்டிக்கொண்டு வந்ததோ தெரியவில்லை; கைத்தட்டல் வானை முட்டியது. இதே பாணியை பின்பற்றி கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவிஞர் கண்ணதாசன் “சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்று வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார் என்பது நினைவில் நிற்கும் நிகழ்வு.

திமுக காரர்கள் மக்களை எதிர்ப்பார்ப்பின் நுனியில் இருக்க வைத்து அவர்களைப் பரவசப் படுத்துவதை ஒரு கலையாகவே கற்றிருந்தார்கள். ஆர்வக்களை சொட்டும் முகங்களை அதிசயிக்க வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு கைவந்தக் கலையாக இருந்தது.

அண்ணா வந்த பிறகும் மேடையில் உடனே ஏறி மைக்கை பிடித்து விடமாட்டார். மேடைக்குப் பின் நின்று அவர் மூக்குப்பொடி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் நாகூர் ஹனிபாவை மேடை ஏற்றுவார்கள். ஹனிபா மேடை ஏறியதுமே கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். ஹனிபாவின் ஆஜானுபாகுவான உயரம், மிடுக்கான தோற்றம், கணீரென்ற குரல் இவைகள் அவர்மீது காந்தசக்தி போன்ற ஓர் ஈர்ப்பை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியது.

பொதுமக்கள் ஆர்வமிகுதியால் எதிர்பார்ப்பின் உச்சகட்ட நிலைக்கு எட்டியிருப்பார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்று அந்த சிம்மக்குரலோன் ராகமெடுத்து பாடலை கர்ஜிக்கையில் மெய்மறந்து போவார்கள் கூட்டத்தினர். பாடல் முடியும் தறுவாயில் ஒரு அட்டகாசமான Entry கொடுப்பார் அறிஞர் அண்ணா. பொதுமக்கள் அடையும் பரவசநிலையை சொல்லவா வேண்டும்? காமிராக்கள் மின்னலாய் பளிச்சிட ‘கிளிக், கிளிக்‘ என்ற சப்தம் தொடர்ச்சியாய் கேட்கும். பெரும் பரபரப்புக்கிடையே ‘அண்ணா வாழ்க’ ‘அண்ணா வாழ்க’ என்ற முழக்கம் இடைவிடாது ஒலிக்கும். அதற்குப் பிறகுதான் அண்ணா பேசத் தொடங்குவார்.

“நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்” என்று நாகூர் ஹனிபாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக அன்றிலிருந்து இன்றுவரை நாகூர் ஹனிபா ஒரு பகடைக்காயாக, பலிகடாவாக, பரிசோதனை எலியாக, கறிவேப்பிலையாகவே திமுகவிற்கு பயன்பட்டு வந்தார் என்பதில் நன்றாகவே நமக்கு விளங்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா

19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.

அச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார். இனி சற்று காலத்திற்கு ம.தி.மு.க.வின் மேடைகளில் மறுபடியும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.

நாகூர் ஹனிபாவை வெறும் ஒரு பாடகனாக மட்டும் தராசில் வைத்து தரம் பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். அவருடைய இடத்தை நிரப்ப இன்னொருவர் அவ்வளவு சீக்கிரம் வருவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு கிண்டல்

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அக்கட்சியை கிண்டல் செய்து ஒரு பாடலைப் பாடினார் நாகூர் ஹனிபா.

“கீழே இறங்கு..
மக்கள் குரலுக்கு இறங்கு.
ஆண்டது போதும்.
மக்கள் மாண்டது போதும்”

என்ற பாடல் வரிகள் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கியது. மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைவிட வார்த்தைகளாலே ‘சுருக்’கென்று காங்கிரஸ்காரர்களின் நெஞ்சங்களை தைத்த பாடல் ஒன்று உண்டு.

“சோறு போடாத சோம்பேறியே!
பதவி நாற்காலி உனக்கொரு கேடா?
ஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட,
இது உன் பாட்டன் வீடா?”

என்ற பாடல்தான் அது. இந்த இருபாடல்களை எழுதியதும் நாகூர் சலீம்தான். “எலிக்கறியைத் தின்னச் சொன்ன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?” என்ற தெரு வாசகங்களும், இந்தப் பாடலும்தான் காங்கிரஸ் கட்சியை அரியாசனத்திலிருந்து கீழே இறக்க உதவிய பயங்கர ஆயுதங்களாக இருந்தன என்றால் அது மிகையாகாது.

“வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது” என்றான் நெப்போலியன். ஹனிபாவின் பாடல்கள் பேனாமுனையைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.

(இன்னும் வரும்)

அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

 

Tags: , , ,

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)


கலைஞர் ஓர் ஆச்சரியம்

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே ‘அல்வா’ கொடுத்தாரா அல்லது ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கே ‘அல்வா’ கொடுத்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கலைஞர் அவர்களின் அபிமானத்திற்கு ஆளாகி இதுநாள் வரை கலைஞரையே துதிபாடிவரும் என் மானசீக குரு கவிக்கோ அப்துல் ரகுமானை இவ்வேளையில் இங்கு நான் குறிப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் சோலை, கவிக்கோ, கலைஞர்

வெற்றி பல கண்டு – நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும்
எனக் கேட்டால் – அப்துல்
ரகுமானைத் தருகவென்பேன்

என்று கவிக்கோ அப்துல் ரகுமானை வெகுவாகப் பாராட்டியவர் கலைஞர். அப்படிப்பட்ட ஒரு நட்பிறுக்கம் அவர்கள் இருவருக்குமிடையில் இன்றும் நிலவுகிறது.

என் கவிதை உனக்கு பூச்சொரியும்
ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

என்று கவியரங்கம் ஒன்றில் கலைஞரை வானளாவப் புகழ்ந்து கவிதை பாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிக்கோ அவர்களே! கலைஞரைப் பார்த்தால் உங்களுக்கு மட்டும்தான் ஆச்சரியமாக இருக்கிறதா? எங்களுக்கும்தான் பெருத்த ஆச்சரியம்.

அவருடைய தமிழ்ப்பற்று எங்கே போயிற்று?
அவருடைய பகுத்தறிவுக் கொள்கை எங்கே பறந்தது?
அவருடைய திராவிட உணர்வு என்ன ஆனது?
எப்படி இருந்த இவர் எப்படி ஆகி விட்டார்?

என்று எங்களுக்கும்தான் ஆச்சரியம் தாங்கவே முடியவில்லை.

ஆரம்பத்தில் “கடவுள் இல்லை” என்ற நாத்திகக் கொள்கையில் ஊறித்திளைத்த கலைஞர் அவர்கள். “ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்ற கொள்கைக்கு மாறி, இன்று ரகசியமாக ஆன்மீகத்திற்கும் மாறி விட்டார். என்ன ஓர் ஆச்சரியம்?

திராவிட பாரம்பரியத்தில் வந்த நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி சாமி கும்பிட்டதை விமர்சித்த கலைஞர் அவர்கள், தான் தாலி கட்டிய மனைவி சாய்பாபாவுக்கும், சாமியார்களுக்கும் பக்தையாகிப் போனதைப் பற்றி எதையும் சொல்ல முடியாமல் மெளனம் சாதிக்கிறார்.

ஆமாம். கலைஞரின் போக்கைப் பார்த்த எங்களுக்கும் ஆச்சரியம்தான்.

மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்த திராவிட பாரம்பரியத்தில் வந்த கலைஞர் மஞ்சள் துண்டுதான் ராசி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

புத்தபிரான் சொன்னதற்காக அவர் அதை அணிகிறாரா, ஓஷோ சொன்னதற்காக அணிகிறாரா, நண்பர் இராமதாஸ் அணிவித்த காரணத்தினால் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டாரா அல்லது ஜோஸியர் ஆலோசனையின் பேரில் அணிந்துக் கொண்டாரா என்பது “பெர்முடா முக்கோண”த்தைக் காட்டிலும் மர்மமாய் இருக்கிறது.

“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” – இது பூம்புகார் படத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய பிரபலமான ‘பஞ்ச்’ டயலாக். நடந்தவைகளை வைத்து பார்க்கும்போது நம் தலைவரின் ‘மனசாட்சி’ உறங்க ஆரம்பித்து, வீல்சேரில் மனக்குரங்கு வாக்கிங் கிளம்பி விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சிறுபான்மைச் சமுதாயத்திற்கு தான் ஒரு காப்பாளன் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்த கலைஞர் அவர்களின் மனநிலை மாறிப்போனது ஏன் என்று இதுவரை நமக்கு புரியாதப் புதிர்.

“சங்கு மார்க் கைலிகளைத்தான் நான் விரும்பி அணிவேன்” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, கோவலன் கதை எழுதிய அவரை முஸ்லீம்களின் காவலன் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?

இப்படி எல்லா விதத்திலும் மாறிப்போன கலைஞர் அவர்களைக் காண்கையில் எங்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை கவிக்கோ அவர்களே!

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்கிற்கு அடுத்தபடியாக . “நான் லுங்கி அணியாத முஸ்லிம், தொப்பி போடாத இஸ்லாமியன்” என்னும் கலைஞரின் இந்த பஞ்ச் டயலாக்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்”என்றெல்லாம் பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

இன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான். அன்று காயிதேமில்லத் உயிரோடு இருந்த காலத்தில் பச்சைக்கொடி ஏந்தி, கட்டுக்கோப்பாக ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்த சமூகம் இன்றும் அதுபோலவே இருந்திருந்தால் இந்நேரம் இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதிகள் விஜயகாந்த் கட்சியை விட சட்டசபையில் அதிகம் இருந்திருப்பார்கள். நமக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப் பெற்றிருப்பார்கள்.

அப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது.

இதோ பாருங்கள், கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட முதுகுவலி கவிக்கோ அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது

முதுகு வலிக்கிறது உனக்கு
வலிக்காதா…?
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

என்று வினா தொடுக்கிறார் கவிக்கோ.

கலைஞருக்கு மட்டுமா முதுகு வலிக்கிறது. எங்களுக்கும்தான் வலிக்கிறது. கலைஞர் எங்கள் புறமுதுகில் இப்படி குத்தி விட்டாரே என்று மனம் வெதும்பி துடிக்காத இஸ்லாமியச் சகோதரனே இருக்க முடியாது.

தன் வாழ்நாள் முழுதும் கலைஞரைப் புகழ்ந்து கவிதை வடித்துக் கொண்டிருந்த கவிக்கோ அவர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் வாழ்த்திப் பாடிக்கொண்டிருந்த இசைமுரசு இ.எம்.ஹனிபாவுக்கும் கலைஞர் செய்த கைம்மாறு ஒன்று உண்டு.

கெட்டதை எழுதும்போது நல்லதையும் சேர்த்து எழுதத்தானே வேண்டும்? இருவருக்கும் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை வாரி வழங்கினார் கருணையின் வடிவமான கலைஞர் கருணாநிதி.

முஸ்லீம் சமுதாயத்தினரிடையே இருந்த ஒற்றுமையைக் குலைத்துவிட்டு, பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியச் சமூகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்துவிட்டு கவிக்கோ அவர்களுக்கும் இசைமுரசு அவர்களுக்கும் இந்த பதவியை வாரி வழங்கியதால் மட்டும் கலைஞர் அவர்களின் கறை அழிந்து விடுமா என்ன?

நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !

என்று கலைஞரைப்பார்த்து கவிதை பாடினார் கவிஞர் வாலி. “நீ எங்கள் கிழக்கு” என்றால் “எங்களின் விடிவுகாலம் உன்னாலேதான்” என்று பொருள். “உனக்கு என்றும் இல்லை மேற்கு” என்றால் “உன் புகழுக்கு அஸ்தமனமே கிடையாது” என்று பொருள். “நீ வடக்கு வழிபடும் தெற்கு” என்றால் “சோனியா காந்தி அம்மையார் உன் கருணையால்தான் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறார்” என்று பொருள்.

இந்த வரிகளைப் படித்ததும் எனக்கு பழைய முழக்கங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற உணர்ச்சியூட்டும் முழக்கத்தை முன்வைத்தே அண்ணா வழி வந்த கலைஞர் அவர்கள் நம் திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பி நம்மை பரவசப் படுத்தினார். அதற்குப்பிறகு நடுவண் அரசோடு உறவு கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்ற திமுகவின் தலைவர் கருணாநிதி, “வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது” என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தார்.

வலம்புரிஜானுக்கு கொடுத்த “வார்த்தைசித்தர்” பட்டத்தை வாபஸ் பெற்று “வாழும் வள்ளுவருக்கு” கொடுத்திருக்கலாம்.

நாத்திகம் போன்ற விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. “பிராமண எதிரிப்பு?” – அது அவ்வப்போது தேவைப்படும்போது வந்து வந்து போகும். தமிழினம், தமிழுணர்வு போன்ற விஷயங்கள் இலங்கைப் பிரச்சினைக்குப் பிறகு மிகவும் கவனமாகவும் ரகசியக்குரலிலுமே முழங்கப் படுகிறது.

“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக” திராவிட இயக்கங்களின் அடிப்படையான கொள்கைகளை “திராவிடக் கட்சிகள்” என்று பெயரளவில் செயல்படும் அனைவரும் காற்றில் பறக்கவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது பரிதாபமான உண்மை.

கவிக்கோ சொன்னதுபோல் கலைஞர் ஓர் ஆச்சரியம். அவரது மனமாற்றங்கள் சிதம்பர ரகசியம். அவரது ஒவ்வொரு செயலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களைப் பெற்று, வெற்றி கண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தன்னிகரில்லா தமிழ்ப்பற்றை புகழாத நாவுகளே இல்லை. பாராட்டாத பத்திரிக்கைகள் இல்லை. அதே கலைஞர் கருணாநிதி, தான் தொடர்பு கொண்ட தொலைகாட்சி ஊடகங்களுக்கும், அவர்களது வாரிசு நிறுவனங்களுக்கும், தன் குடும்பத்தார்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கும் பிறமொழி பெயர்கள் வைப்பதை கண்டும் காணாததுமாய் இருந்து புரட்சி செய்தார்.

என்ன ஒரு மாற்றம் பார்த்தீர்களா? தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா? கலைஞரின் கொள்கை நமக்கு புரியவே மாட்டேன்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்றார். “சிவாஜி” என்ற பெயரெல்லாம் தமிழ் பெயராம். நம்புங்கள்.

உதயநிதி ஸ்டாலின் கதநாயகனாக நடித்த படத்திற்கு “ஒரு கல்… ஒரு கண்ணாடி” என்று பெயர் வைத்தார்கள். அதையும் சுருக்கி கச்சிதமாக “ஒ.க.. ஒ. க..” என்று வைத்தாலென்ன என்று மூளையை கசக்கினார்கள். ஏதோ தெலுங்கு பேச்சு போல அசிங்கமாக உள்ளது என்ற கருத்து தெரிவிக்கப்பட உடனே “O.K. O.K.” என்று பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார்கள். பெயர் மாடர்னாக இருக்கிறது, ஈர்ப்பாக இருக்கிறது என்று அச்செயலுக்கு புகழ்மாலை வேறு. இந்த கண்றாவியை எல்லாம் மவுனமாக அமர்ந்து இரசித்த நம் தலைவரின் தமிழ்ப்பற்றை எப்படி புகழ்வதென்று எனக்குத் தெரியவில்லை.

ஏன் இந்த மனமாற்றம் கலைஞருக்கு? நமக்கு சொல்லத் தெரியவில்லை.

கவிக்கோ சொன்னது போல கலைஞர் என்றாலே ஆச்சரியம். ஆமாம் எங்களுக்கும்தான்.

கடந்த 1967-க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் அவர்கள் பெரிய முதலாளிகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் அவர்களின் குடும்பமோ உலகப் பணக்காரர்களின் முன்னணி வரிசையில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதோ தன் வாழ்நாள் முழுதும் திமுகவின் உயிர்நாடியாகத் திகழ்ந்த அந்த வரலாற்று நாயகனான நாகூர் ஹனிபா, உச்ச ஸ்தாயியில் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்து, சிறுகச் சிறுக சிமெண்டும், செங்கல்லும், இரும்புக்கம்பியுமாய் வாங்கி கட்டிய வீட்டில், தன் வயோதிக காலத்தில், தனிமையாய் அமர்ந்து கலைஞர் அவர்களோடு தனக்கிருந்த பால்ய நட்பையும் அவரது தாராள மனதையும் சிலாகித்து அசைபோட்டு, தன்னைக் காண வருவோரிடத்திலெல்லாம் கலைஞரின் புகழைப் பரப்பி வருகிறார்.

இதனால்தான் நாகூர் ஹனிபாவின் பெயரை பிழைக்கத் தெரியாதவர்களின் வரிசையில் இணைக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.

– அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com

(இன்னும் வரும்)

 

Tags: , , , ,