RSS

நீதிபதி இஸ்மாயீலைப்பற்றி காஞ்சி பெரியவர்

13 Jun

கம்பராமாயணத்தில் “வாலியை இராமன் கொன்றது முறையா?” என்ற கேள்வி காலங்காலமாய் விவாதத்திற்குரிய பொருளாக பட்டிமன்றத்தில் பவனி வருகிறது. இதனை அடிப்படையாய்க் கொண்டு வாதி பிரதிவாதங்களை முன்வைத்து “மூன்று வினாக்கள்” என்ற நூலில் “வாலியை இராமன் கொன்றது சரிதான்” என தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.

இந்நூலைப் படித்துவிட்டு பெரியவர் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி “நீங்கள் ஒரு தலைமை நீதிபதி. நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள்” என்று புலகாங்கிதம் அடைந்தார்.

 

Tags: , ,

Leave a comment