உஷ்……
கனவுகளை
கலைக்காதீர்கள்.
கனவு காண்பது
என் பிறப்புரிமை.
கனவுகளை தடை செய்ய
இ.பி.கோ.வில்
எந்தப் பிரிவுமில்லை
கனவுகளை
கலைக்காதீர்கள்…
நினைப்பிலாவது
நெஞ்சங்கள் பூரிக்கட்டுமே!
கான்கிரீட் காடுகளாக இல்லாமல்
கண்ணைப் பறிக்கும் பூஞ்சோலை
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
விவேகமுள்ள சமூகம்
வேரோடு பகை களைந்து
வீறுநடைபோடும் பிரதேசம்
என்மதம் என்னுரிமை
எவரும் மூக்கை நுழைக்கா தேசம்
மாசுபடா சுவாசம்
மரங்கள் நிறைந்த பூமி
உஷ்…..
கனவுகளை கலைக்காதீர்கள்
– அப்துல் கையூம்
Nagendra Bharathi
October 12, 2015 at 8:10 am
அருமை