RSS

பிறர் பார்வையில்….. நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

22 May

‘இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?’

– முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய்

“எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்’
– பிரபல வக்கீல் செதல்வாட்

‘தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது’

– 2.2.2005 துக்ளக் இதழில் ‘சோ’

M.M.Ismail – A Man of Integrity – The Hindu

‘பெண்கள் நம் சமூகத்தில முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. நீ இந்தச் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியா இருப்பேன்னு நான் நம்பறேன். என்னுடைய ஆசியும், என்னுடைய வழிகாட்டுதலும் உனக்கு எப்போதும் உண்டு’ என்று என் தலையில கை வைத்துச் சொன்னார். அப்போது அவர் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் என்னைக் குறித்து அவர் மேடையில் பேசினார். கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும். அதற்கான வல்லமையையும், வலுவையும், தேடலையும் இறைவன் எனக்குள் ஆத்ம பலமாய்த் தர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

– பேராசிரியை பர்வீன் சுல்தானா

“M.M.Ismail; A multi-faceted Personality” – Indian Express

 

Tags: ,

One response to “பிறர் பார்வையில்….. நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

Leave a comment