RSS

நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :

21 May

1921 – 8, பிப்ரவரி நாகூரில் பிறந்தார்
1945 – சென்னை சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்
1945 – அவருடைய முதற் நூல் :மெளலான ஆஜாத் வெளிவந்தது
1946 – 1951 – சென்னையில் வழக்கறிஞராகவும் விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் தொழில் புரிந்தார்
1951 – 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர் அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞரராக நியமனம்
1967 – பிப்ரவரி – தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம்
1967 – நவம்பர் – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல்
1970 – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களை வரவழைத்து தமிழ் பண்பாடுக் கழகம்- ஹாங்காங் கெளரவித்தது
1974 – சென்னையில் கம்பன் கழகம் நிறுவ காராணமாக இருந்தார்.

1978-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி கம்பன் கழகம் இவரை அழைத்து தமிழறிஞர் பி.ஸ்ரீ. முன்னிலையில் “கம்ப ராமாயண கலங்கரை விளக்கம்” என்ற பட்டத்தை அளித்து கெளரவித்தது.
1979 – அண்ணாமலை பல்கலைக் கழகம் அவருக்கு “டாக்டர்” பட்டம் வழங்கி கெளரவித்தது
1979 – நவம்பர் 6, சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்
1979 – 1981 வரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நீடித்தார்
1980 – அக்டோபர் 27, பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிக தமிழக ஆளுநராக நியமனம் பெற்றார்
1981 – ஜூலை 8, தன்னை கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலத்திற்கு மாற்றல் செய்ததை கண்டித்து தலைமை நீதிபதியை பதவியைத் துறந்தார்
1989 – மதுரை ரோட்டரி சங்கம் ‘பால் ஹாரிஸ் பெல்லோஷிப்’ விருது
1991 – சென்னை நாரத கான சபா “ராம ரத்னம்” விருது
1997 – ஆழ்வார் ஆய்வு மையம் “ராமனுஜர்” விருது
2005 – ஜனவரி 17 திங்கட்கிழமையன்று அவரது மறைவு

           பெற்ற பட்டங்கள் :

  • “இயல் செல்வம்”
  • “சேவா ரத்தினம்”
  • “இராம ரத்தினம்”
  • “கலைமாமணி”  (1991 – 1992)
 

Tags: , , , , , , , ,

One response to “நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :

Leave a comment